Monday, 3 March 2008

காதல் கவிதை

பெண்ணே...!
நீ என்னைக் காதலிக்கிறாயா
நண்பன் சொல்ல கேட்டேன்
பைத்தியகாரப் பெண்
ஊரார் சொல்லக் கேட்டேன்
பாவம் அவள்
உற்றார் சொல்லக் கேட்டேன்
தலைஎழுத்து...
உறவினர் சொல்லக் கேட்டேன்

ஏன் இதெல்லாம் உனக்கு
நீ காதலிப்பதால்
கடிமணம் புரிய நினைப்பதால்...!?!?

நானோ.!?
காகிதக் கவிதைக்கு
உறவுக்காரன்
கனவு வாழ்க்கைக்கு
சொந்தக்காரன்
துன்பத்தின் நிறம்
அறிந்தவன்
இன்பத்தின் குணம்
அறியாதவன்
வசந்தம் என்பதை
காணாதவன்
வாழ்க்கையை என்றோ....
வழியிலேத் தொலைத்தவன்

இது காதலுக்கு
விளக்கம் அல்ல
உன் வாழ்க்கைக்கு
விளக்கம்

அன்பே..!
இருண்டுப்போன
என் வாழ்க்கைக்கு
இறந்தகாலம் தான்
நிகழ்காலம்

தொடங்காத
உன் வாழ்க்கைக்கு
வசந்தகாலம் தான்
எதிர்காலம்

நீ...!
காதல் என்னும்
சடுதிக்கு சாரதியாய்
மாறாமல்
வாழ்க்கை என்னும்
கவிதைக்கு பாரதியாய்
மாறிவிடு

கடலில் விழுந்த
மழைத்துளியாய்
போகாமல்
சிப்பிக்குள் விழுன்த்த
துளி முத்தாய்
மாறிவிடு

புயலில் சிக்கிய
சருகாய் உதிராமல்
பூஜைக்கு உதவும்
பூவாய் மாறிவிடு

துன்பத் தோனிக்கு
ஆராய் இல்லாமல்
இன்பக்கேனிக்கு ஊற்றாய்
மாறிவிடு

துன்பத் தூளியில்
ஆடுவதோ என் வாழ்க்கை
கரையில் துள்ளும்
மீனாய் மாறுவதா
உன் வேட்க்கை

துள்ளிவரும் இல்லம் அருவி நீ
நன்மான நிலத்திலே
பயணம் செய்
இரைகடலே உன்
சங்கமம் ....!!!

இந்த பாலையை
நாடாதே
உன் வாழ்க்கை
பயணம்
பாதியை தாண்டாதே

இதை ஏற்றுகோல் அன்பே
உன் வருங்காலம் இனிக்கும்
மனசைத் தேற்றிகோல் பெண்ணே
உன் வாழ்க்கைக்கு
புதுவடிவம் கிடைக்கும்

ஏன் இந்த நிசப்தம்...!?
மௌனமா உன் மொழி
கண்ணிற்குலமாய் என் விழி
வேண்டாம் எனக்கு வீண்பழி
உன் கரம் பற்றமுடியாது
கானகமே என் வழி....?!?!
- வல்லம்படுகை.ச.பால்ராஜ்


UN



Friday, 29 February 2008

நட்பு

நண்பா...!
நான் கவிதைகள் எழுதுவது
கனவுப் போல் ஆகிவிட்டது

கனவுகள் என்பது
கடுகு போல் ஆகிவிட்டது
நித்திரை என்பது
சித்திரைப் போல் ஆகிவிட்டது

இருந்தும் எழுதுகிறேன்....
நிலவைப் போல
உன் முகம்
வானம் போல
நம் நட்பு

சிலநாள் கழித்து...
வானில் பார்த்தேன் நிலவை
தெரிந்தது அரைவட்டம்

நினைத்துப் பார்த்தேன்
உன் உருவை
உரைந்துப் போனது
என் இரத்தம் ...!
சிதைத்துப் பார்த்தேன்
என் நினைவை
நிசப்தமாய்
என் இதயம் ...?!

காரணம்...!
அறைவட்டமாய்
போயிருந்தது
உன் முகம்

தொட்டுப் பார்த்தேன்
பணிக்கட்டியாய்
மரத்துப் போயிருந்தது
என் மனம்

மரணத்தை அழைத்தேன்
வந்து போனது
சில கணம்
உயிரை வெறுத்தேன்
அட.. மரணத்திலும்
ஏன் சிக்கனம்
காரணம் நட்பின் தாகம்

இன்னும் சிலநாள் கழித்து....
நிலவும் வரவில்லை
அதன் நிழலும் வரவில்லை
ஆனால்
வானம் மட்டும் அப்படியே...!

- வல்லம்படுகை.ச.பால்ராஜ்.


காதல் கவிதை

அன்பே...!
வந்து வந்து போகும் நிலவால்
வானம் தேய்வது இல்லை

வந்து வந்து போகும் அலையால்
கரை நோவது இல்லை

வந்து வந்து போகும் மழையால்
பூமி மாறுவது இல்லை

வந்து வந்து போகும் உன் நினைவால்
நான் மட்டும் எப்படி மாறிப் போகிறேன்...!

வாய் திறவாமலே சிரிக்கிறேன்
விழி மூடாமலே தூங்குகிறேன்
பாதம் போகாமலே நடக்கிறேன்
பாவம் அன்பே நான்
புயலில் சிக்கிய
பூவாய் தவிக்கிறேன்...!

உன்னை பார்த்த ஒரு நொடியில்...!
என் மூலையில் பூகம்பம்
என் இதயத்தில் இடிமின்னல்
என் உள்ளத்தில் வெள்ளப்பெருக்கு
என் இரத்தத்தில் சுனாமி
ஆம் அன்பே
இவை அனைத்தும்
என் உடம்பில்
நிகழும் பருவ மாற்றங்கள்
காரணம்...!
அனைத்துக்கும் உன்
பார்வை கோலங்கள்

அந்த இயற்கைக்கே
இல்லாத சக்தி..!?
உன் பார்வைக்கு
மட்டும் எப்படி...?!

அன்பே...!
எனக்கு பிடித்த கவிதை - உன் பெயர்
எனக்கு பிடித்த ஜீவன் - நீ
என்னக்கு பிடித்த மொழி - உன் மௌனம்
எனக்கு பிடித்த உலகம் - உன் நினைவுகள்

ஆனால்...!
உனக்கு பிடித்தவை
என் கவிதைப் பூக்களும்
என் கல்லறையும் தான்
என்பதை
நீ சொல்லாமலே
புரிந்துகொண்டேன் அன்பே..!

விடைபெறும் என் உயிருக்கு
விலைமதிப்பில்லாத வாழ்த்துகலாய்
உன் ஒருத் துளி கண்ணிராவது....!?


- வல்லம்படுகை.ச.பால்ராஜ்.






புறப்படு இளைஞனே...!

புறப்படு இளைஞனே....!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்....

மௌனங்களை உடைத்துவிட்டு
மத மோகங்களை கிழித்துவிட்டு
சாதியப் பேய்களை விரட்டிவிட்டு
சமாதானத்தை பறக்கவிடு
இடையில் யார் வந்தாலும்
அன்புச் சங்கிலியால் புரட்டிஎடு

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்

அமைதி உருவாகும்
அணுகுண்டு வீழ்ந்தப்பின்
யார் இருப்பார்
இந்தப் பூமியில்
வேண்டுமா ....? இந்த அமைதி

அமைதி உருவாகும்
அகிம்சை வழியில் - உன்
அறிவுக் கண் திறந்தப்பின்
யார் இறப்பார்
இந்தப் பூமியில்
வேண்டாமா இந்த அமைதி

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டு தினத்தில்....

வெல்வெட்டு போன்று
உன் மனமிருக்க
கல்வெட்டு போன்று
உன் வாழ்க்கை இருக்க
மின்வெட்டு எதற்கு
உன் முயற்சியில்
பாழ்ப்படு போகாதோ
உன் வாழ்க்கை பாதியில்

புறப்படு இளைஞனே..
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்....

தென்றல் உண்டு
உனக்கு சுவாசமாய் இருக்க
துணிவு உண்டு
உனக்கு கவசமாய் இருக்க
சூரியன் உண்டு
உனக்கு துணையாய் இருக்க
நம்பிக்கை உண்டா ...?!
நீ இளைஞனாய் இருக்க .

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் திணத்தில்

காவிகள் தரித்துக்கொண்டு - நீ
காவியங்கள் எழுத வேண்டாம்
கண்களை மூடிக்கொண்டு
கனவுகள் நீ கான வேண்டாம்
அறிவு கண்களை திறந்து வைத்து
சரித்திரங்கள் ஏற்படுத்து
மனிதச் சமுதாயத்தை
அறவழியில் சீர்ப்படுது

உன்னால் மட்டுமே முடியும்
அது இளைஞனால்
மட்டுமே முடியும்....!!

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்

மின்னலைப் பிடித்து
வளைக்க முடியும்
இன்னலைத் தவிர்த்து
ஜெயிக்க முடியும்
பின் மனிதநேயம்
எப்படி மடித்துப் போகும்...?!

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டுத் தினத்தில்...

உலகை ஆட்டிப் படைக்கும்
தீவிரவாதத்தை
உலகையே தின்று வரும்
லஞ்சலாவன்யத்தை
உனக்கே சவாலாய் வரும்
வேளையிலா திண்டாட்டத்தை
உன்னையே நசுக்கி வரும்
அரசியல்வாதியை
மன்னித்துவிடு
அதுவே அவைகளுக்கு
மரண தண்டனை

புறப்படு இளைஞனே...!
பீனிக்ஸ் பறவையாய்
இந்தப் புத்தாண்டு தினத்தில்....

- வல்லம்படுகை.ச.பால்ராஜ்.